ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

18 ம் நூற்றாண்டிலிருந்து கல்வியின் வளர்ச்சி

18 ம் நூற்றாண்டிலிருந்து கல்வியின் வளர்ச்சி

  1.  1781- முஸ்லீம் சட்டங்களையும் அரபிக் ,பாரசீக மொழிகளையும்  கற்பிப்பதற்க்காக வாரன் ஹாஸ்டிங் ஆல் கல்கத்தா மதரசா  என்ற கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
  2. 1791- இந்து சட்டங்களையும் அதன் தத்துவங்களையும் கற்பிப்பதற்காக ஜொனாதன் டஙகன் அவர்களால் பனாரஸ் ல் சமஸ்கிருத கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
  3. 1813- பட்டய சட்டம் (Charter Act):                                                                     முதல் முறையாக கல்வியின் வளர்ச்சிக்காக ரூபாய் ஒரு லட்சம்  வருடத்திற்கு ஒதுக்கப்பட்டது.
  4. 1823- பிரிட்டிஷ் கல்வி ஆர்வலர்கள் இரு பிரிவுகளாக இருந்தனர்:                                                                                                                           i) ஒரு குழு (ஓரியண்டலிஸ்ட்) கல்வியை இந்தியாபாரம்பரிய மூலம் கற்பிக்கவேண்டும் எனவும்                                                                         ii) மற்றோரு குழு (அங்கிலிஸ்டிக்) ஆங்கில கல்வி மூலம் கற்பிக்கவேண்டும் எனவும் இருந்தனர்.
  5. 1835 மெகாலே கல்வி கொள்கை:                                                           வில்லியம் பென்டிங்க் அவர்கள் கல்வி வளர்ச்சி குறித்து பரிந்துரை செய்ய மெகாலே தலைமையில் குழுவை நியமித்தார்.  இக்குழு அறிவியல்மற்றும் இலக்கியத்தை இந்தியா மக்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க வேண்டும் என பரிந்துரை செய்த்து.இதன்படி ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் அறிவித்தது. இம்முடிவு இரத்தம் மற்றும் நிறத்தால் இந்தியன் சுவையில் ஆங்கிலன்(Indian in blood and colour but english in taste) என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தியது .இக்கோட்பாடு கீழ்நோக்கி வடிகட்டுதல் கோட்பாடு(Down filtration theory) என்று அழைக்கப்படுகிறது.
  6. 1854-சார்லஸ் வூட்ஸ் டெஸ்பாட்ச் கல்வி கொள்கை; (WOODS DESPATCH) :  இந்தியா வில் கல்வியின் நிலைப்பாட்டை ஆராய்வதற்காக டல்ஹவுசில் அவர்களால் அமைக்கப்பட்டது.இது இந்தியாவின் அறிவு பட்டயம்(Magnacarta of English Education in India) என அழைக்கப்படுகிறது.i-உயர் கல்விக்கு ஆங்கிலம் பயிற்று மொழியாகவும் ஆரம்பகல்விக்கு தாய் மொழியும். ii-பெண் கல்விக்கு முக்கியத்துவம். iii - மதசார்பற்ற அரசு பள்ளிகள்.iv-தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பது இதன்படி கல்கத்தா பம்பாய் மெட்ராஸ்(1857) ஆகிய இடங்களில்பல்கலைக்கழகம்ஆரம்பிக்கப்பட்டது.
  7. 1870-.கல்வி மாகாண பட்டியலில் சேர்க்கப்பட்டது அதனால் பண பிரச்சனையால் மிகவும் பாதிக்கப்பட்டது.
  8. 1882- 83.வில்லியம் ஹண்டர் கமிஷன் (HUNTER'S COMMISSION):           கல்வியின் வளர்ச்சினை ஆராயவும், வூட்ஸ் அறிக்கையை ஆய்வு செய்யவும் ரிப்பன் பிரபு இக்குழுவை அமைத்தார். i-1.தொடக்க கல்வி இடைநிலை கல்வி க்கு முக்கியத்துவம்                     அளித்தது.ii-ஆரம்ப கல்வியை தாய் மொழியில் கற்பிக்கவும்.          iii- இடைநிலை கல்வியை இரு பிரிவுகளாக பிரித்தது (தொழில்     கல்வி மற்றும் பட்ட படிப்பு).iv-பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.இதன் படி பஞ்சாப்(1882), அலகாபாத்(1887) இல் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
  9. 1902 ம் ஆண்டு ரயிலேயி கமிஷன்(RAYLEIGH COMMISSION): நாட்டின் பல்கலைக்கழகங்கள் செயல்பாட்டை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டது.i-இதன்படி ம் 1904 ஆண்டு பல்கலைக்கழக சட்டம்  இயற்ற்றப்பட்டது. ii -அணைத்து பல்கலைக்கழகங்களும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.iii -அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட்டன. iv 5 லட்சம் பணம் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக ஓதுக்கப்பட்டது
  10. 1917-19 .சாட்லெர் பல்கலைக்கழக குழு(SADDLER COMMISSION):கல்கத்தா பல்கலைக்கழக பிரச்சினையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது.
  11. 1919 - மொண்டகு சீர்திருத்தம் (Montagu reforms):கல்வி மாகாண பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
  12. 1929 ஹாட்டாக் குழு (HARTOG COMMITTE):அதிக அளவு கல்வி நிலையங்களால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது.i ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.ii- தகுதி உள்ள மாணவர்கள் ,மட்டும் உயர் கல்விக்கு அனுமதிப்பளிப்பது.iii பல்கலைக்கழகங்களில் குறைந்த அளவு இடம் கொடுப்பது.
சுதந்திரத்திற்கு பிறகு:
1. 1948-49 ராதாகிருஷ்ணன் குழு
பல்கலைக்கழக கல்விக்காக அமைக்கப்பட்ட குழு
i 12வருடம் பள்ளி கல்வி
உயர் கல்வி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது
ii பல்கலைக்கழக சான்று நிர்வாக வேலைக்கு தேவை இல்லை என்றது
iii தேர்வுகளின் தரத்தை உயர்த்தியது
iv உயர்கல்விக்கு ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க வேண்டும்
v. UGC அமைக்க பரிந்துரை செய்தது
இதன்படி 1956 UGC அமைக்கப்பட்டது.
2. 1952 முதலியார் கமிஷன் (1952): கமிஷன் இரண்டாம் நிலை கல்விபிரச்சனைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு
3. 1964-66 கோத்தாரி கல்வி குழு:
i நாடு முழுவது ம் ஒரே மாதிரி கல்வி அமைப்பை இருக்க வலியறுத்தியது(10+2+3)
ii முதன்மை கல்விக்கு முன்னுரிமை அளித்தது
iii தேசிய வருமானத்தில் 6% கல்விக்கு ஒதுக்க பரிந்துரை செய்தது
4 .1968- முதல் தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது
இந்திய அரசியலமைப்பின் உள்ள 14 வயது நிறைவு செய்த அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி நிறைவேற்ற முயற்சி செய்தது.
ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தது
5. 1976 -கல்வி பொது பட்டியலில் சேர்க்க பட்டது
6.1986-தேசிய கல்வி கொள்கை
i-ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது
ii கல்வியில் ஏற்ற தாழ்வுகளை அகற்ற முக்கியத்துவம் அளித்தது
iii பள்ளிகள் மேம்படுத்த "ஆபரேஷன் கரும்பலகை" திட்டம் தொடங்கப்பட்டது
7. 1992- தேசிய கல்வி கொள்கை;
அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
8. 2000-01சர்வ சிக்ஷா அபியான் திட்டம்
அனைவருக்கும் கல்வி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. .
9 .2002 - 86 அரசியலமைப்பு திருத்தச் சட்டம்:
சரத்து 21A அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது
10. 2009 கல்வி பெறும் உரிமை சட்டம் (RTE):
2010 ஏப்ரல் 1 இல் நடைமுறைக்கு வந்தது
11. 2015-16 சுப்பிரமணியன் குழு:
கல்வி துறையை மேம்படுத்துவதற்கு சுப்பிரமணியன் குழு நியமிக்கப்பட்டது.
i இந்திய கல்வி சேவையை(Indian Education Service) மனித வளத்துறை அமைச்சகம் கீழ் உருவாக்க வேண்டும்
ii 6 % தேசிய வருமானத்தை கல்வியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டும்
iii ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஆசிரியர் களுக்கு தகுதி சான்றிதழ் அளிக்க படவேண்டும்.
iv 4 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பள்ளி கல்வி என்பது ஒரு உரிமை என அறிவிக்க வேண்டும் மற்றும் அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தப்பட. வேண்டும் .
v பிஎட் படிப்புகள் நுழைவதற்கு பட்டதாரி மட்டத்தில் 50% மதிப்பெண்களுடன் குறைந்தபட்ச தகுதி நிலையில் இருக்க வேண்டும்.
vi மதிய உணவு (MDM) திட்டம் உயர்நிலை பள்ளிகள்மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்
vii உயர் கல்வி மேலாண்மைக்கு ஒரு தனி சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
viii கல்லூரி வளாகத்தில் அரசியல் மீது கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.

சனி, 25 பிப்ரவரி, 2017

வரைபடம்


வரைபடம்:
  • புவியின் மீது முதல் முதலில் கற்பனை கோடுகளை வரைந்தவர் தாலமி
  • கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனை கோடு - அட்சரேகை
  • வடக்கு தெற்காக வரைப்படும் கர்பனை கோடு - தீர்க்கரேகை
  • அட்சரேகை தொலைவை கணக்கிட பயன்படுகிறது
  • தீர்க்கரேகை நேரத்தை கணக்கிடப்பயண்படுகிறது
  • 0 ° தீர்க்கரேகை நேர கோடு எனப்படும்
  • 180°தீர்க்கரேகை நாள் கோடு எனப்படும்
  • பூமத்தியரேகை பகுதியில் தீர்க்க கேடுகளின் இடையே உள்ள தொலைவு 111km
  • தீர்க்ககோடுகள் இடையே உள்ள நேரவித்தியாசம் 4 நிமிடங்கள்
  • துருவப்பகுதியில் தீர்க்க கோடுகளுக்கு இடையே உள்ள தொலைவு 69 km
  • வரைபடம் மூன்று வகைப்படும் அவை இயற்க்கைவரைபடம்,அரசியல்வரைபடம்.,கருத்துசார் வரைபடம்.

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...