இலக்கணம் - சிறப்பு தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
1. உவமைக் கவிஞர் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - சுரதா
2. திரைக்கவி திலகம் என அழைக்கப்படுபவர் - மருதகாசி
3. ஈசான தேசிகர் என அழைக்கப்படுபவர் - சுவாமிநாத தேசிகர்
4. செந்தமிழ்ச் செல்வர், தமிழ்ப் பெருங்காவலர், என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - தேவநேயபாவாணர்
5. அமுத அடியடைந்த அன்பர் என அழைக்கப்படுபவர் - மாணிக்கவாசகர்
6. குழந்தை கவிஞர் என அழைக்கப்படுபவர் - அழ.வள்ளியப்பா
7. தண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் - திருநாவுக்கரசர்
8. முத்தமிழ் காவலர் என அழைக்கப்படுபவர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
9. எழுச்சி சான்றோர், திருப்புமுனை சிந்தனையாளர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - சாலை இளந்திரையன்
10. திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - திருத்தக்கதேவர்
11. கோதை என அழைக்கப்படுபவர் - ஆண்டாள்
12. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் - புதுமைப்பித்தன்
13. படிக்காத மேதை, கருப்பு காந்தி , கர்ம வீரர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - காமராஜர்
14. செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படுபவர் - வ.உ.சிதம்பரனார்
15. இலக்கியத்தின் சொல்லின் செல்வர் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - இரா.பி.சேதுப்பிள்ளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக