பேரரசுகள்
- மகாஜனபதம் என்பது 16 நாடுகள்
- வஜ்ஜித் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இருந்தன(தலைநகர் வைசாலி)
மகத பேரரசு
ஆர்யங்க மரபு:
- மகத பேரரசு என்பது பீகாரை சுற்றியுள்ள பகுதிகள்
- தலைநகரம் முதலில் சிராஸ்வதி பின்னர் இராஜகிருதம் பின்னர் பாடலிபுத்திரம்
- முதல் அரசர் பிம்பிசாரர்
- இரண்டாம் அரசர் அஜாதசத்ரு
- இவர் முதல் புத்த சமய மாநாட்டை கூட்டினார்
- பாடலிபுத்திரத்தில் கோட்டையை அமைத்தார்
சிசுநாக மரபு:
- தோற்றுவித்தவர்-சிசுநாகர்
நந்தமரபு:
- தோற்றுவித்தவர்-மகாபத்மநந்தர்(தக்காணத்தை கைப்பற்றி மண்ணன்)
- நந்தர்கள் சமணசமயத்தவர்கள்
- சிசுநாகர்,நந்தர்கள் இருவரும் சூத்திரர்கள்
- நந்தர்களின் கடைசி அரசன் - தனநந்தர்
மௌரிய பேரரசு
- தோற்றுவித்தவர்-சந்திரகுப்தமௌரியர்
- உதவியவர்-சாணக்கியர்
- சாணக்கியரின் வேறு பெயர்கள்-கௌடில்யர்,விஷ்னுகுப்தர்
- சாணக்கியர் எழுதிய நூல்-அர்தசாஸ்திரம்
- சந்திரகுப்தமௌரியர் செல்யூஸ் நிகேடரின்(அலெக்சாண்டரின் படை தளபதி) மகளை மணந்தார்
- கிரக்க பயணி மெகஸ்தனிஸ்(நூல்:இண்டிகா) செல்யூகஸ்நிகடரால் சந்திரகுப்தமௌரியர் அவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
- சந்திரகுப்தமௌரியர் சமணர்
- இறுதி காலத்தில் பரத்பாகு என்ற துறவியுடன் துறவு மேற்கொண்டார்
- சந்திரபாஷ்டி இவர் நினைவாக கட்டப்பட்ட கோவில் ஆகும்
- சந்திரகுப்தமௌரியரை தொடர்ந்து அவரது மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்
அசோகர்
- பிந்துசாரர்க்கு பின் அசோகர் அரியணை ஏறினார்
- மௌரியர்களில் சிறந்த அரசர் அசோகர்
- முதலில் சிவனை வழிபட்டவர்
- கலிங்கபோருக்கு பின்(கிமு 261) உபகுப்தரால்(திஸா) புத்த சமயத்தை தழுவினார்
- பாடலிபுத்திரம் 3 ம் புத்த சமய மாட்டில் மகாஅசோகர் என பட்டம் பெற்றார்
- பட்டப்பெயர்:பிரியதர்ஷன்,தேவனாம்பிரியர்
- மக்கள் பணிபுரிய மகாமாத்திரர்கள் நியமிக்கப்பட்டனர்
- எல்லையை காவல் புரிந்தோர் அந்தமகாமாத்திரர்கள்
- தலைநகரங்கள்:
2.வடக்கு-தட்சசீலம்
3.மேற்கு-உஜ்ஜைனி
4.கிழக்கு-தோசாலி
5.மையதலைநகர் -பாடலிபுத்திரம்
- அதிகாரிகள்-யுக்தர்,பிரதேசிகர்,தூதர்,ஒற்றர்
- நகரநிர்வாகம்-6பேர் கொண்ட 5 குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது(குறிப்பு இண்டிகாவில் இருந்து பெறப்பட்டது)
- தன்மகள் சுங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை இலங்கைகு புத்தம் மதம் பரப்ப அசோகர் அனுப்பினார்
குஷண பேரரசு
- நிருவியவர்-முதலாம் காட்பிசசு
- குஷணர்கள்-யூச்சி இனமக்கள்
கனிஷ்கர்
- சிறந்த அரசர்-கனிஷ்கர்
- கனிஷ்கரின் தலைநகரம்-புருசபரம்(பெஷாவர்)
- சீனதளபதி பாஞ்சியோ உடன் போர் புரிந்தார்
- நான்காவது புத்த சமய மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்
- இம்மாநாட்டில் மகாயானம் தோண்றியது
- அசுவகோசர் புத்த சரிதம்,சூத்திர அலங்காரம் எழுதினார்
- வசுமித்திரர் மகாவிபாசா எழுதியுள்ளார்
- மருத்துவ அறிஞர் சரகரும் கிரக்க கட்டட வல்லுநர் எஜிலாசும் அரசவையில் இடம் பெற்றன
- கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டார்
- இவர் ஆட்சிக்கு வந்த காலத்தை முதலாய் கொண்டு சக சகாப்தம் கணக்கிடபடுகிறது
குப்த பேரரசு
- தலைநகரம்-பாடலிபுத்திரம்
- முதல் அரசர் முதலாம் சந்திரகுப்தர்
- முதலாம் சமுத்திரகுப்தரின் வெற்றிகளை அலகாபாத் கல்வெட்டு கூறுகிறது
- அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் அரிசேனர்
- ஆர்யபட்டர்,வராகமித்ரர்,சரகர்,சுஷ்ருதர்,தன்வந்திரி குப்தர் காலத்தவர்கள்
- மெமரௌளி இரும்புதூண் குப்தர் காலத்தியது
- குமாரகுப்தர் நலந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார்
- இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யன் என அழைக்கப்பட்டார்
- குப்தர் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது
- சீன பயனி பாகியான் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் வருகை புரிந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக